உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்

அய்யலூரில் லாட்டரி விற்ற 5 பேர் கைது

Published On 2022-07-31 05:57 GMT   |   Update On 2022-07-31 05:57 GMT
  • அய்யலூர் குறிஞ்சிநகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக புகார் எழுந்தது.
  • ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.

வடமதுரை:

அய்யலூர் குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது28).

மீனாட்சியூரை சேர்ந்தவர் பள்ளிக்கூடத்தான் (35), பாலகுறிச்சியை சேர்ந்த சின்னச்சாமி (65), வைரபிள்ளைப்பட்டியை சேர்ந்த தங்கவேல் (55), குப்பம்பட்டியை சேர்ந்த பெருமாள் (55). இவர்கள் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்தி ருந்தனர்.

ரோந்துசென்ற வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் 5 பேரை கைது செய்து லாட்டரி சீட்டை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News