உள்ளூர் செய்திகள்

கோவையில் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த 3 பேர் கைது

Published On 2022-07-27 09:54 GMT   |   Update On 2022-07-27 09:54 GMT
  • கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 200 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர்.
  • 3 பேர் மீதும் ஏற்கனவே அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது

கோவை:

கோவை சுந்தராபுரம் குறிச்சியை சேர்ந்தவர் பூஞ்சோலை(46). ஆட்டோ டிரைவர்.

இவர் நேற்று வாடிக்கையாளர் ஒருவரை ஆட்டோவில் ஏற்றி கொண்டு போத்தனூர் சாரதாமில் ரோட்டில் இறக்கி விட்டார்.

பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் வந்த போது 3 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்தனர்.

பின்னர் பூஞ்சோலையிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர்.

இது குறித்து பூஞ்சோலை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், கத்தியை வைத்து மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்தது போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த அஜீஷ் ரகுமான்(26), வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அனீஷ்(22) மற்றும் போத்தனூர் மைல்கல்லை சேர்ந்த சயத் அபுதாகீர்(26) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான 3 பேர் மீதும் ஏற்கனவே அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News