உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

சாத்தான்குளம் அருகே முத்தாரம்மன் கோவிலில் 207 திருவிளக்கு பூஜை

Published On 2022-09-21 09:26 GMT   |   Update On 2022-09-21 09:26 GMT
  • சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.
  • பூஜையில் பங்கேற்றவர்களிடம் வினாடி- வினா கேள்வி கேட்டு பரிசு வழங்கப்பட்டது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி இந்து முன்ன ணி, இந்து அன்னையர் முன்னணி சார்பில் 207 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பூஜைக்கு மாநில இந்து முன்னணி நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி கிராமத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். பூஜையை இந்து அன்னையர் முன்னணி ஒன்றிய தலைவி பரமேஸ்வரி வழி நடத்தினார். இதில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி அன்னையை வழிப்பட்டனர்.

விளக்கு பூஜையில் பங்கேற்றவர்களிடம் வினாடி- வினா கேள்வி கேட்டு பதிலளித்த வர்களுக்கு பரிசு வழங்க ப்பட்டது. இதில் கோவில் நிர்வாகி சுந்தர்ராஜ், இந்து அன்னையர் முன்னணி பூவுடையார்புரம் கிளைத் தலைவர் தங்கலட்சுமி, செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்து முன்னணி கிளை செயலர் சுதாகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News