உள்ளூர் செய்திகள்
நகை பறிப்பு

பெண்களிடம் நகை பறிப்பு

Published On 2022-06-03 08:01 GMT   |   Update On 2022-06-03 08:01 GMT
3 பெண்களிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை பற்றி போலீசில் புகார் கொடுத்தன் பேரில் விசாரி்த்து வருகின்றனர்.
விருதுநகர்

அருப்புக்கோட்டை சலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் துளசியம்மா (வயது 50). இவர் நேற்று அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டு பஸ்சில் வந்துள்ளார். 

அப்போது அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுவிட்டான். இதுபற்றி  அவர் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார்.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(வயது 48). இவர் பாளையம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏறி அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுவிட்டான். 

இதுபற்றி அருப்புக்கோட்டை போலீசில் கிருஷ்ணவேணி புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை ேதடி வருகின்றனர்.
வெம்பக்கோட்டை ஆர்.ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் மாயாதேவி(வயது 36). இவர் தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் மாயாதேவி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துள்ளார். அப்போது மாயாதேவி செயினை கெட்டியாக பிடித்து கொண்டதால் பாதி  செயினை எடுத்துக் கொண்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். 

அவரை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்தனர். அவரை போலீசில் ஒப்படைத்தனர். இதில் செயின் பறி்த்த வாலிபர் பாடலிங்கம் (26) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News