உள்ளூர் செய்திகள்
கல்லூரி பஸ்சில் சிக்கி மாணவர் பலி: கைதான டிரைவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
சேலம்:
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மகன் அப்துல்கலாம் (வயது 20), இவர் சேலம் சின்ன திருப்பதியில் உள்ள ஜெயராம் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல கல்லூரி பஸ்சில் ஏறினார்.
அப்போது கல்லூரியை விட்டு சற்று தூரத்தில் வந்ததும் வளைவில் சென்ற போது பஸ்சில் இருந்து அப்துல்கலாம் நிலை தடுமாறி கீேழ விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து டிரைவர் மணியை கைது செய்தனர்.
இந்தநிலையில் கல்லூரி மாணவர்கள் அந்த கல்லூரிக்கு உள்ளே பஸ்சை விடாமல் பஸ்சை சிறைபிடித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும்போலீசார் சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட டிரைவர் மணியை நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.