உள்ளூர் செய்திகள்
புதிய வரி விதிப்பு நேர்மையானதாக இருக்க வேண்டும் நுகர்வோர் வலியுறுத்தல்
வரி விதிப்பு என்பது, உள்ளாட்சிகளின் வருவாய் ஆதாரத்தை பெருக்க, அதன் மூலம், வளர்ச்சிப்பணி மேற்கொள்ள உதவும்.
அவிநாசி:
மாநில அரசின் வழிகாட்டுதல் படி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு, புதிய விகிதாச்சார அடிப்படையில், வரி விதிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. நகராட்சியாக உருவெடுத்த திருமுருகன்பூண்டியிலும் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர் பாஷா கூறுகையில்:
வரி விதிப்பு என்பது, உள்ளாட்சிகளின் வருவாய் ஆதாரத்தை பெருக்க, அதன் மூலம், வளர்ச்சிப்பணி மேற்கொள்ள உதவும்.அதே நேரம், புதிய வரி விதிப்பு நேர்மையானதாக இருக்க வேண்டும். சரியான முறையில் வரி விதிப்பு இருக்கும் வகையில் அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் என்றார்.