உள்ளூர் செய்திகள்
போராட்டம்

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-27 11:28 GMT   |   Update On 2022-05-27 11:28 GMT
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை:

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

நிலுவையில் உள்ள 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பை உடனடியாக திரும்ப வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சென்னையில் உள்ள வட சென்னை, கிழக்கு சென்னை, மேற்கு சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை 1, மற்றும் தென் சென்னை 2 மாவட்டங்கள் சார்பாக மாநிலத் தலைவர் இரா. சண்முகராஜன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர்கள் தேவராஜ், சி.சுரேஷ், சு.முத்து ரமேஷ் , பா.தில்லை குமரன், ஏ.கிருஷ்ண லீலா மற்றும் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News