உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு

Published On 2022-05-23 08:23 GMT   |   Update On 2022-05-23 08:23 GMT
நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது கார் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எறும்பு காடு பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார் (வயது 20). இவர்  நேற்று நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். 

அஜய்குமார் எறும்பு காடு அருகே வந்தபோது எதிர்திசையில் கார் வந்தது. வடசேரியை சேர்ந்த நடராஜன் அந்தக் காரை ஓட்டி வந்தார். அந்தக் கார் மீது எதிர்பாராத விதமாக அஜய்குமார் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். 

பலத்த காயத்துடன் அஜய்குமார் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.  அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி அஜய்குமார் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News