என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
நீங்கள் தேடியது "ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு"
நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது கார் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எறும்பு காடு பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார் (வயது 20). இவர் நேற்று நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அஜய்குமார் எறும்பு காடு அருகே வந்தபோது எதிர்திசையில் கார் வந்தது. வடசேரியை சேர்ந்த நடராஜன் அந்தக் காரை ஓட்டி வந்தார். அந்தக் கார் மீது எதிர்பாராத விதமாக அஜய்குமார் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
பலத்த காயத்துடன் அஜய்குமார் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அஜய்குமார் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X