உள்ளூர் செய்திகள்
முருங்கப்பாளையம் மெயின் ரோடு, பார்க்அவென்யூ, புஸ்பா தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
திருப்பூர்:
திருப்பூர் துணை மின் நிலையத்தில் ராம்நகர் பீடர் மற்றும் ஓடக்காடு பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 23-ந் தேதி (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி அன்று மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட குமார் நகர், ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, இந்திரா நகர், இட்டேரி ரோடு, போஸ்டல் காலனி, அவினாசிரோடு, முருங்கப்பாளையம் மெயின் ரோடு, பார்க்அவென்யூ, புஸ்பா தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.