உள்ளூர் செய்திகள்
மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் வி.அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லன்(வயது 60). இவர் கிளாங்குளம் ஊரணி கரை புளியமரத்தில் பழம் பறிக்கும் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது மரத்திலிருந்து அவர் தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவரைமீீ்ட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செல்லன் மனைவி சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.