உள்ளூர் செய்திகள்
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு விஜயகிரி பழனியாண்டவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விஜயகிரி பழனி ஆண்டவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விஜயகிரி பழனி ஆண்டவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் கோப்பணம் பாளையத்தில் உள்ள பாலமுருகன், பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள முருகன் , பாலப்பட்டிபாலமுருகன், மோகனூர் பால சுப்பிரமணிய சாமி, பச்சைமலை முருகன், கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி, ஐயம்பாளையம் முருகன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.