உள்ளூர் செய்திகள்
.

லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-05-22 08:57 GMT   |   Update On 2022-05-22 08:57 GMT
லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(57) மினி லாரி டிரைவர்.இவரது மனைவி அருள்மொழி(45).கிருஷ்ணன்  அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பல முறை மனைவி கண்டித்தும் தொடர்ந்து கணவர் மது குடித்துவிட்டு வந்ததால் அவர்களுக்கிடையே  மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணன் விஷத்தை குடித்துவிட்டார்.  உயிருக்கு போராடி அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு  நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கிருஷ்ணன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News