உள்ளூர் செய்திகள்
தற்கொலை செய்த ராமலிங்கம்.

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2022-05-22 08:50 GMT   |   Update On 2022-05-22 08:50 GMT
பாபநாசம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை கொண்டுள்ளார்.
பாபநாசம்:

பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ராயர் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 34) விவசாயி. இவர் தொடர்ந்து சர்க்கரை வியாதி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த ராமலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு வைத்திருந்த விஷ பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாபநாசம் அரசு மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றனர். 

பின்னர் மேல் சிகிச்சை க்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராமலிங்கம் இறந்தார்.

இது குறித்து அவருடைய மனைவி கயல்விழி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News