search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம் குடித்து"

    • அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
    • அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவட்டார்:

    குலசேகரம் அருகே உள்ள ஆனைக்கூட்டுவிளை கிளக்கம்பாகம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் அஜில் ராஜ் (வயது 38). இவருக்கு அனுஜா (26) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில மாதங்களாக இவருக்கும், மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதன் காரணமாக அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அஜில் ராஜ் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுவுடன் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரைகளை தின்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நட்ராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி செம்புளிச்சாம் பாளையம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ் (49). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    நட்ராஜ் தனது சகோதரர் ஈஸ்வரன் என்பவரது வீட்டில் குடியிருந்த கொண்டு விவசாயம் செய்து வந்தார். நட்ராஜ்க்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இதனால் மன உலைச்சலில் இருந்து வந்த நட்ராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நட்ராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எலக்ட்ரீசியன். இவருக்கு நிஷாந்தி என்ற மனைவியும், அஸ்வதி (6) அனுகிரகா (1) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
    • கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

    நாகர்கோவில் : தக்கலை அருகே கிருஷ்ண மங்கலம் அக்கர விளை பகுதியை சேர்ந்தவர் மணிசந்தர் (வயது 36). எலக்ட்ரீசியன். இவருக்கு நிஷாந்தி என்ற மனைவியும், அஸ்வதி (6) அனுகிரகா (1) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    மணிசந்தருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் மணிசந்தர் மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் நிஷாந்தி கோபித்தில் குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இதனால் மன வருத்தம் அடைந்த மணி சந்தர் வீட்டுக்குள் சென்று விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மணிசந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்மந்தமாக நிஷாந்தி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி சந்தர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தக்கலை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குப்புசாமி பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65). விவசாயியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் குப்புசாமி கடந்த சில நாட்களாக மதுப்பழக்கத்தை விட முடியாமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குப்புசாமி பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குப்புசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கால் வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.
    • சிகிச்சை பலனின்றி அய்யாவு பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் இரட்டிபாளையம் மேல் வீதியை சேர்ந்தவர் அய்யாவு (55). இவர் கடந்த 5 வருடமாக முட்டி வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்தபோது வாந்தி எடுத்துள்ளார்.

    இது குறித்து அவரது மனைவி கேட்டபோது கால் வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிகிச்சை பெற்று வந்த அஜீத்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மனைவி மகேஸ்வரி. கூலித் தொழிலாளி. இவர்களது மகன் அஜீத்குமார் (வயது24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் அஜீத்குமாருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளானர். இதற்காக அவர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.

    இதனால் மனமுடைந்த காணப்பட்ட அஜீத்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை தாய் மகேஸ்வரி மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஜீத்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மகேஸ்வரி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி கணக்கரசம்பாளை யத்தை சேர்ந்தவர் சீனி வாசன் (35). விவசாயி. இவருக்கும் கர்நாடகா மாநிலம் சம்ராஜ் நகர் கான கஹள்ளி பகுதியை சேர்ந்த மாதவ நாய்க்கர் மகள் பிரியா (30) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது.

    இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். சீனி வாசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த பிரியா கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்த கலைக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரியாவை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பிரியா இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசில் பிரியாவின் தாய் ரத்னாம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    • சம்பவத்தன்று அருண்பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    • அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கிருஷ்ணகிரி மாவட்டம் செண்பதம் புதூர், தோனிகோலை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பெருமக்கா. இவர்களுக்கு அம்சவேணி என்ற மகளும், அருண்பிரகாஷ் (23) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். அருண்பிரகாசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    அவர் கடந்த 2 வருடமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார்.

    அப்போது அருகே குடியிருக்கும் திருமணமான பெண் ஒருவருடன் அருண்பிரகாசுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 2 பேரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அருண்பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற னர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழிலேயே அருண் பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக அருண்பிரகாஷ் பெற்றோ ருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மகன் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது பெற்றோர் அரச்ச லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகன் சார்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு இளம்பெண் மற்றும் அவரது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக பரபரப்பு புகார் அளித்தனர்.

    அதன் பேரில் அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இந்த நிலையில் சதானந்தன் கடந்த சில நாட்களாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார்.
    • இதனால் அவரை மனைவி மற்றும் மகன்கள் தடுத்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம் பட்டி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சதானந்தன் (வயது 59). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சதானந்தன் கடந்த சில நாட்களாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார். இதனால் அவரை மனைவி மற்றும் மகன்கள் தடுத்து வந்தனர்.

    நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் விஷம் குடித்த நிலையில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இன்று அவரது உடல் பிரேதபரி சோதனைக்கு பின் உறவின ர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
    • பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பிரதாஸ். இவர் அந்தியூரில் மளிகை கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரீத்திபா (16) என்ற மகள் உள்ளார்.

    பிரீத்திபா 10 -ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் தர்மபுரியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பிரீத்திபா அந்தியூர் அருகே மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே பிரீத்திபா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரீத்திபா இது போல் ஏற்கனவே ஒருமுறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருந்தார். தற்போது 2-வது முறையாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று பரிதாபமாக இறந்து விட்டார்.

    • மகளிர் குழுவுக்கு செலுத்த வைத்திருந்த பணத்தை எடுத்து வேலுசாமி மது குடித்துள்ளார்.
    • விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பி.மேட்டுப்பாளையம் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி(37). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஜீவா என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனா். வேலுசாமிக்கு மதுப்பழக்கம் உள்ளது.

    இதனால், வேலுசாமி குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் மது குடித்து வந்துள்ளார். வேலுசாமி கடந்த மாதம் 29ம் தேதி அவரது மனைவி ஜீவா வீட்டில் மகளிர் குழுவுக்கு செலுத்த வைத்திருந்த பணத்தை எடுத்து வேலுசாமி மது குடித்துள்ளார்.

    இதையடுத்து கணவன்-மனைவிக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், மனவேதனை அடைந்த வேலுசாமி வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது மனைவி ஜோதி, அக்கம்பக்கத்தினர் உதவி யுடன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர்
    • மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சின்ன களியூர், பகவதி நகரை சேர்ந்தவர் மாதன்(70). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். மகளுக்கு திருமணம் ஆகி தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 3 மாதமாக மாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் பக்கத்து தெருவை சேர்ந்த உறவினருக்கு திருமணம் என்பதால் மாதன் மனைவி அவரது மகள் பேரக்குழந்தைகளுடன் அனைவரும் நேற்று திருமண வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் மாதன் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் மாதனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவரது பேரன் வீட்டுக்கு வந்தார். அப்போது மாதன் கட்டிலில் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார்.

    இது குறித்த அவரது பேரன் அக்கம் பக்கத்தினர் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த குருணை மருந்தை எடுத்து குடித்து மாதன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

    உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே மாதன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×