என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
- அபிஷேக் வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே மயங்கி கிடந்தார்.
- சிகிச்சை பிரிவில் இருந்த அபிஷேக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சூசையபுரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி விஜயா. இவர்களின் ஒரே மகன் அபிஷேக் (23).
லாரன்ஸ் மோட்டார் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அபிஷேக் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு தந்தைக்கு உதவியாக மோட்டார் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அபிஷேக்குக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனை தந்ைத லாரன்ஸ் கண்டித்து உள்ளார். சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு அபிஷேக் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த லாரன்ஸ் இப்படி மது அருந்தி வந்தால் உனக்கு எப்படி பெண் பார்ப்பது.
யார் உனக்கு பெண் கொடுப்பார்கள் என்று திட்டி உள்ளார். இதனால் அபிஷேக் கோபத்துடன் வீட்டை விட்டு பின்புறம் சென்று நின்று கொண்டி ருந்தார்.
சிறிது நேரம் கழித்து மகன் வீட்டுக்குள் வந்து விடுவார் என லாரன்ஸ் மற்றும் விஜயா வீட்டுக்குள் சென்று விட்டனர்.
ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் மகன் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த லாரன்ஸ் வீட்டு பின்புறம் சென்று பார்த்தார்.
அப்போது அபிஷேக் வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே மயங்கி கிடந்தார். அவரது அருகே விஷ பாட்டில் இருந்தது.
இதனையடுத்து அபிஷேக்கை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அபிஷேக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்