என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
- தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார்
- சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள எலவமலை சென்ன நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மாரசாமி (72). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னம்மாள் (60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் தங்களது மூத்த மகன் சரவணனுடன் வசித்து வந்தனர். மாரசாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 2 வருடங்களாக மாரசாமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வலி அதிகரித்து காணப்பட்டதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
ஆனால் அவரது நோய் தீராததால் கடும் அவதிக்குள்ளாகி வந்த மாரசாமி தன்னால் வலி தாங்க முடிய வில்லை என குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்த ன்று வழக்கம் போல அனைவரும் வேலை க்கு சென்று விட்டனர். மாலை யில் அனைவரும் வீடு திரும்பிய போது தங்களது தோட்டத்தில் மாரசாமியின் சைக்கிள் நிறுத்தியிருப்பதை பார்த்து அங்கு சென்று பார்த்துள்ள னர்.
அப்போது அங்குள்ள தென்னை மரத்தின் கீழ் மாரசாமி அசைவின்றி கிடந்துள்ளார். அவரிடமி ருந்து பூச்சிக் கொல்லி மருந்து (விஷம்) வாடை வீசியுள்ளது.
உடனடியாக அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை க்கு பின் உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்