உள்ளூர் செய்திகள்
கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2022-05-21 11:05 GMT   |   Update On 2022-05-21 11:05 GMT
மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை

அவனியாபுரம், அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் வேலு (28). நேற்று மாலை இவர் பிரசன்னா காலனியில் உள்ள டீக் கடைக்கு சென்றார். அப்போது பெருங்குடி, வடக்குத்தெரு, வழுக்கை அய்யனார் (29) என்பவர் வேலுவிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,500-ஐ பறித்து சென்றார். 

இது குறித்த புகாரின் பேரில்  அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழுக்கை அய்யனாரை கைது செய்தனர்.

செல்லூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (37). இவர் நேற்று பைபாஸ் ரோடு டீக்கடை அருகே நடந்து சென்றார். அப்போது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,100-ஐ பறித்து சென்றது.
இதேபோல மாடக்குளம், வி.கே.பி. நகர், சந்தானம் (45) என்பவரிடம் மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,200-ஐ பறித்து தப்பியது. 

மேற்கண்ட 2 சம்பவங்கள் தொடர்பாக மாநகர போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது 2 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில், 3 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் சிந்தாமணி, கீழத்தெரு கார்த்திகேயன் (25), அனுப்பானடி தாய் நகர் ஜெய்சங்கர் (26), ஆரப்பாளையம் கோபாலகிருஷ்ணன் (28) என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News