உள்ளூர் செய்திகள்
நகை பறித்த கொள்ளையன்

போலீஸ்காரர் மனைவியிடம் 25 பவுன் பறிப்பு

Published On 2022-05-21 10:51 GMT   |   Update On 2022-05-21 10:51 GMT
போலீஸ்காரர் மனைவியிடம் 25 பவுன் பறித்த கொள்ளையன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிடிபட்டான்.
மதுரை அவனியாபுரம் மாநகராட்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம்.  இவர் மதுரை மாநகர் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். 

இவரது மனைவி முத்து (வயது 30)இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3பேர் நபர்கள் முத்துஅணிந்து இருந்த 25 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

அப்போது எதிரே வந்த வாகனம் மோதி ெகாள்ளையர்கள் 2 பேர் கீழே 
விழுந்தனர். அப்போது அருகில் இருந்தவர்கள் ஒரு நபரையும் பிடித்துக்கொண்டனர். மற்ற 2 பேர் தப்பித்து ஓடிவிட்டனர் இதுகுறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் பேரில் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட நபரையும் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பிடிபட்ட நபர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஆகாஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News