உள்ளூர் செய்திகள்
குமாரபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
குமாரபாளையம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி அக்கமாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 44). தனியார் பஸ் டிரைவர்.
இவர் குமாரபாளை–யம் தாலுகா பல்லக்கா–பாளையத்தில் உள்ள தனது தங்கை வீட்டின் முன்பு நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார். நேற்று காலை 6 மணியளவில் வந்து பார்த்தபோது அங்கு நிறுத்–தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.
இதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து சுதாகரன் குமாரபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.