search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumarapalayam"

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும்

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று பேசுகையில், ஒரு துன்பகரமான இன்பத்தைப் பெறுவதற்கான நோக்கத்துடன் ஒரு மாணவரின் அதிகாரம் அல்லது மேன்மையைக் காட்டுதல்தான் ராகிங். நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அனைத்து மாணவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியிலான ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு, கவுன்சில்களுடன் கலந்தாலோசித்து இந்த ராகிங் ஒழுங்குமுறையை கொண்டு வருகிறது. மேலும் சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது.

    அணையின் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நேற்று பகல் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

    நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 1 லட்சத்து 33 ஆயிரத்து 941 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 120.20 அடியாக உயர்ந்தது.

    இதையடுத்து மேட்டூர் அணையின் 16 கண் மதகு மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேட்டூர் காவிரி கரையோரம் சாகுபடி செய்திருந்த வாழை, பருத்தி, மற்றும் மாஞ்செடிகளை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடி செல்கிறது. அனல் மின் நிலையம் அருகே உள்ள காளியம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    மேட்டூர் அணை அருகே உள்ள தங்கமாபுரி பட்டணத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்து வந்தவர்களை வெளியேறுமாறு வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பலர் தங்களது வீடுகளை பூட்டி விட்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் அங்குள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேட்டூர் 16 கண் மதகு அருகே காவிரி கரையோரத்தில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியின் வீட்டை தண்ணீர் சூழ்ந்ததால் அவரை வருவாய்த் துறையினர் மீட்டனர்.

    காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள கலைமகள் வீதி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இப்பகுதியில் வசித்து வந்த 30 குடும்பங்களை சேர்ந்த 75-க்கும் மேற்பட்டவர்கள் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    குமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வந்த 3 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் பள்ளி பாளையம் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    அதிகாரிகள் தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈராடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்டோரா மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை ஒகேனக்கல்லில் 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகள் இருந்த இடம் தெரியாமல் பாறைகளை மூழ்கடித்து தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லில் திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    காவிரி கரையேர பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் இருப்பதற்காக அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல் அருகே மலைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடும் காட்சி

    வெள்ளப் பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. அருவி பக்கம் யாரும் செல்லாமல் இருப்பதற்காக வருவாய்த் துறையினரும் தீயணைப்பு துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பேவனூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery


    குமாரபாளையம் நகராட்சியில் ரூ.20 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் தங்கமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்புவிழா மற்றும் ரூ.67 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான வாகனங்களை நகராட்சி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விழா நடந்தது.

    இந்த விழாவுக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் தமிழக மின்சாரம்், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குமாரபாளையம் நகராட்சி 1-வது வார்டு காவேரிநகரில் ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன்கடை கட்டிடத்தை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுபொருட்களை வழங்கினார். அதை தொடர்ந்து பூசாரிக்காடு, ராஜராஜன் நகர் பகுதி, சந்தைபேட்டை ரோடு, காமாட்சி அம்மன் கோவில் வீதி ஆகிய இடங்களில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைத்தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை்்் திட்டத்தின்கீழ் நகராட்சிக்கு ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட சிறிய டிப்பர் வாகனங்களையும், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 2 பெரிய டிப்பர் வாகனங்களையும்,் பேட்டரியால் இயங்கும் 8 குப்பை அள்ளும் வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களை அமைச்சர் தங்கமணி நகராட்சி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மேலும் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 60 மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியே பிரித்து வாங்கும் பிளாஸ்டிக் கலன்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், ஆணையாளர் மகேஸ்வரி, நகர வங்கி தலைவர் ஏ.கே.நாகராஜன், முன்னாள் நகரச்செயலாளர் எம்.எஸ்.குமணன் உள்பட நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். 
    ×