உள்ளூர் செய்திகள்
பணகுடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரைவர் சாவு
பணகுடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி:
கேரள மாநிலம் பனச்சமூடு பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 34). லாரி டிரைவர். இவரது லாரியை பழுதுபார்ப்பதற்காக நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த லாரியை எடுப்பதற்காக காவல்கிணறு பஸ் நிலையத்தில் இருந்து நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் பனச்சமூடு பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 34). லாரி டிரைவர். இவரது லாரியை பழுதுபார்ப்பதற்காக நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த லாரியை எடுப்பதற்காக காவல்கிணறு பஸ் நிலையத்தில் இருந்து நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.