உள்ளூர் செய்திகள்
முகாமில் நலத்திட்ட உதவிகளை பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

சுரண்டை அருகே மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

Published On 2022-05-19 06:49 GMT   |   Update On 2022-05-19 06:49 GMT
சுரண்டை அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சுரண்டை:

ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் மருக்காலங்குளம் மற்றும் முத்தம்மாள்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்களின் மனுநீதி நாள் முகாம் மருக்காலங்குளம்கிராமத்தில் கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் ஆலங்குளம் ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன், 10-வது வார்டு மாவட்ட கவுன்சிலர்  முத்துலட்சுமி அன்பழகன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வள்ளியம்மாள் முருகேசன் தென்காசி தெற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரும், முத்தம்மாள் புரம் பஞ்சாயத்து தலைவருமான முருகன்,  ஆலங்குளம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் படித்துறை, அண்ணாமலை, புதூர் பொன் தயானந்த் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 முகாமில் பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் பட்டா மற்றும் விவசாய பொருட்கள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News