உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் கோட்டத்தில் மின்வாரிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
கடையநல்லூர் கோட்டத்தில் மின்வாரிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மின் பகிர்மான வட்டம் சார்பாக தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கடையநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன் ராஜ் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.