உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

புதியம்புத்தூர் பகுதியில் வேனில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2022-05-18 09:30 GMT   |   Update On 2022-05-18 09:30 GMT
புதியம்புத்தூர் பகுதியில் வேனில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதியம்புத்தூர்:

 ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல தட்டப்பாறை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது வேனில்  புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் இருந்தனர். மேலும் வேனில்  30 மூடைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து  கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்து தமிழ்நாடு உணவுப் பொருள் பாதுகாப்பு கழகத்திடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News