உள்ளூர் செய்திகள்
புதியம்புத்தூர் பகுதியில் வேனில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
புதியம்புத்தூர் பகுதியில் வேனில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல தட்டப்பாறை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வேனில் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் இருந்தனர். மேலும் வேனில் 30 மூடைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்து தமிழ்நாடு உணவுப் பொருள் பாதுகாப்பு கழகத்திடம் ஒப்படைத்தனர்.