உள்ளூர் செய்திகள்
பஸ் நிலையத்தை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பார்வையிட்ட காட்சி.

குமாரபாளையம் பஸ் நிலையத்தில் மார்க்கெட்டு அமைக்கும் பணிகள் நகராட்சி தலைவர் ஆய்வு

Published On 2022-05-17 09:11 GMT   |   Update On 2022-05-17 09:11 GMT
குமாரபாளையம் பஸ் நிலையத்தில் மார்க்கெட்டு அமைக்கும் பணிகள் நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பஸ் நிலையத்தில் காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் நிலையத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி கடைகள் அமைக்கும் பணி துவங்கியது. இந்த பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். 

கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார்,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News