உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை ெகாடுத்ததாக போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள பழனிவலசை கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் பெற்றோர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் கரைவலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுவிட்டனர். இதை அறிந்த இதே ஊரைச் சேர்ந்த சிவகுமார் (51) இரவு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து வீட்டுக்குள் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.