உள்ளூர் செய்திகள்
வாசுதேவநல்லூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மாதிரி தேர்வு
வாசுதேவநல்லூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மாதிரி தேர்வு நடைபெற்றது.
சிவகிரி:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய மகளிர் திட்ட அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி.குரூப்-2 தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடைபெற்றது.
யூனியன் தலைவரும் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குரூப் 2 தேர்வில் வாசுதேவநல்லூர் மற்றும் வட்டார ஊரக பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாதிரி தேர்வுக்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர் போத்திராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திரன், சுப்பாராஜ், இசக்கியம்மாள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தென்மலை கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் முத்துராஜ், மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.