உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

தூத்துக்குடியில் ஜவுளிக்கடை அதிபரின் மனைவியை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு

Published On 2022-05-12 09:49 GMT   |   Update On 2022-05-12 09:49 GMT
தூத்துக்குடியில் ஜவுளிக்கடை அதிபரின் மனைவியை தாக்கி 7 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்தவர் போஸ்கோ. இவரது மனைவி சாயசித்ரா (வயது 52). இவர்கள் தூத்துக்குடியில் ரெடிமேட் ஜவுளிக் கடை நடத்தி வருகின்றனர். 

நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சாயசித்ரா தனது மகளுடன் மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் புதிய பஸ் நிலையம் கடந்து சென்ற போது பின்னால் 2  பேர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். 

திடீரென அவர்கள் சாயசித்ரா கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தனர். இதனால் நிலை தடுமாறிய தாய்-மகள் இருவரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். 

உடனே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News