உள்ளூர் செய்திகள்
தேர்வில் பங்கேற்ற ஒருவர் வலை வீசிய காட்சி.

பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் மீன்வள உதவியாளர் பணிக்கு தேர்வு

Published On 2022-05-11 10:26 GMT   |   Update On 2022-05-11 10:26 GMT
பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் மீன்வள உதவியாளர் பணிக்கு தேர்வு நடைபெற்றது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீன் வள உதவியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளது.

இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானதையடுத்து உதவியாளர்கள் தேர்வு செய்யும் பணி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்த தேர்வில் கலந்து கொள்வதற்காக நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 75-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

அவர்களுக்கு விளையாட்டு விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மீன்களை பிடிக்க எவ்வாறு வலை வீசுவது, எப்படி வலை பின்னுவது, எவ்வாறு நீந்துவது என்பது தொடர்பான தேர்வு நடைபெற்றது.

இந்த போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக திறமையை வெளிப்படுத்துபவர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுகத்தில் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News