உள்ளூர் செய்திகள்
கைது

இளம்பெண்ணின் ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்ட வாலிபர் கைது

Published On 2022-05-11 07:50 GMT   |   Update On 2022-05-11 07:50 GMT
திருப்பூரில் இளம்பெண்ணின் ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூரை சேர்ந்தவர் இமான் ஹமீப். இவர் காசிபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் இன்ஸ்டராகிராம் மூலம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 21வயதான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

இதையடுத்து இமான் ஹமீப் ஆசைவார்த்தைகளை கூறி இளம்பெண்ணை திருப்பூருக்கு வரவழைத்தார். பின்னர் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக தங்கியிருந்து வந்ததுடன் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தனர். இதனிடையே திருமணம் செய்து கொள்ளுமாறு காதலி வற்புறுத்திய நிலையில், இமான் ஹமீப் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே இளம்பெண் பிரிந்து சென்றார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் காதலியுடன் தனிமையில் இருந்த ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் இமான் ஹமீப்பை பிடித்து விசாரித்து வந்தனர். அப்போது அவரது செல்போனில் காதலியின் ஏராளமான ஆபாச படங்கள் இருந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர். இந்தநிலையில் இன்று இமான் ஹமீப்பை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News