உள்ளூர் செய்திகள்
மடத்துக்குளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்
முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்கள் இதில் பங்கேற்று ஊசி போட்டுக் கொண்டனர்.
மடத்துக்குளம்:
கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. தற்போது சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு தொடர்வதால் தற்போது இந்த தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக மெகா தடுப்பூசி முகாம் மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம், சங்கராமநல்லூர் பேரூராட்சிகள், துங்காவி, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகளில் நடந்தது. முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்கள் இதில் பங்கேற்று ஊசி போட்டுக் கொண்டனர். காலை முதல் மாலை வரை நடந்த இம்முகாமில் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் 800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.