உள்ளூர் செய்திகள்
புளியங்குடி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
புளியங்குடி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் வைத்து தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி செய்து காட்டினர்.
இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தீ விபத்து ஏற்பட்டால் தீ மேலும் பரவாமல் எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும், தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் உள்ளே சிக்கிய பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தீவிபத்து தடுப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு புளியங்குடி அரசு மருத்துவமனை டாக்டர் கோதரியாசர் அரபாத் தலைமை தாங்கினார். டாக்டர்கள் கார்த்திகா, ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை அலுவலர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் வைத்து தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி செய்து காட்டினர்.
இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தீ விபத்து ஏற்பட்டால் தீ மேலும் பரவாமல் எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும், தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் உள்ளே சிக்கிய பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தீவிபத்து தடுப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு புளியங்குடி அரசு மருத்துவமனை டாக்டர் கோதரியாசர் அரபாத் தலைமை தாங்கினார். டாக்டர்கள் கார்த்திகா, ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை அலுவலர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.