உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சங்கரன்கோவில் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-05-04 10:12 GMT   |   Update On 2022-05-04 10:12 GMT
சங்கரன்கோவில் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலான்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது35). தொழிலாளி. இவரது மனைவி வேல்துரைச்சி.

இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் முத்துராஜ் மனமுடைந்து காணப்பட்டார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 1-ந்தேதி வீடு திரும்பிய நிலையில் அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக சின்ன–கோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News