உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை?- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

Published On 2022-05-04 06:31 GMT   |   Update On 2022-05-04 07:17 GMT
பள்ளி மாணவர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பு ஒருசில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. வருகிற 28ந்தேதி வரை இது நீடிக்கும் நிலையில், வரும் 24ந்தேதி வரை அனல் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கட்டாய கல்வி திட்டத்தின் அடிப்படையில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விடப்படும் கோடை விடுமுறை 5 வகுப்பு வரை ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மட்டுமா அல்லது 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுமா என கேள்வியும் எழுந்துள்ளது.

பள்ளி மாணவர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பு ஒருசில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News