உள்ளூர் செய்திகள்
பணகுடி அருகே மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு
பணகுடி அருகே பஸ்சை சர்வீஸ் செய்தபோது மின்சாரம் தாக்கி டிரைவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள வெள்ளமடத்தை அடுத்த அனந்த பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் வேணு(வயது 33).
இவர் லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவரும், மற்றொரு பஸ்சின் டிரைவரும் கல்லூரி வளாகத்தில் உள்ள சர்வீஸ் செய்யும் இடத்தில் நின்றனர்.
அங்கு பஸ்சின் மேற்கூரையை கழுவிவிட்டு, பஸ்சுக்கு கீழ்புறமாக வேணு சென்று கழுவ தொடங்கி உள்ளார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள வெள்ளமடத்தை அடுத்த அனந்த பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் வேணு(வயது 33).
இவர் லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவரும், மற்றொரு பஸ்சின் டிரைவரும் கல்லூரி வளாகத்தில் உள்ள சர்வீஸ் செய்யும் இடத்தில் நின்றனர்.
அங்கு பஸ்சின் மேற்கூரையை கழுவிவிட்டு, பஸ்சுக்கு கீழ்புறமாக வேணு சென்று கழுவ தொடங்கி உள்ளார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.