உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தராசு, எடை கற்கள் உள்ளிட்டவற்றை படத்தில் காணலாம்.

நெல்லையில் பூ, காய்கறி மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2022-04-29 10:07 GMT   |   Update On 2022-04-29 10:07 GMT
நெல்லையில் உள்ள பூ மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லை:

சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி உத்தரவின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் வழிகாட்டுதலின்படியும், நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் ஹேமலதா ஆலோசனைப்படி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை ஆய்வர்கள், உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வர்கள் ஒரு குழுவாக பாளை மற்றும் நெல்லை சந்திப்பு பகுதிகளில் உள்ள பூ மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் திடீர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

அப்போது முத்திரையிடப்படாத, மறு முத்திரையிடப்படாத மற்றும் தரப்படுத்தப்படாத மேஜை தராசுகள், மின்னணு தராசுகள், இரும்பு எடைக்கற்கள், அளவைகள் உள்பட மொத்தம் 63 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News