உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

9½ கிலோ குட்கா பறிமுதல், தொழிலாளி கைது

Published On 2022-04-29 10:05 GMT   |   Update On 2022-04-29 10:05 GMT
பேட்டையில் விற்பனைக்காக கொண்டு சென்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 9½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:

 பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் சாஸ்திரிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். 

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் முக்கூடல் பகுதியை சேர்ந்த தொழிலாளி காரல்மார்க்ஸ் (வயது 54) என்பதும், விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் 9½ கிலோ குட்கா வைத்திருந்ததும்  தெரியவந்தது. 

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News