உள்ளூர் செய்திகள்
அமைச்சர் பொன்முடி

சொத்துகுவிப்பு வழக்கு- அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

Published On 2022-04-28 10:30 GMT   |   Update On 2022-04-28 10:30 GMT
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக கூறி கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
விழுப்புரம்:

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக கூறி கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையில் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. சரவணன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
Tags:    

Similar News