உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை - உறவினர் போக்சோ சட்டத்தில் கைது
15 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,வெளியில் சொல்லக்கூடாது என் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வெளியில் சொல்லக்கூடாது என் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி, சிறுமியை துன்புறுத்திய கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ராஜா (வயது 40)என்பவரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.