உள்ளூர் செய்திகள்
பேரையூர் அருகே ரேசன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சிலைமலைபட்டி பகுதியில் இன்று அதிகாலை பேரையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தவழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1.5 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வலையங்குளம் பகுதியை சேர்ந்த அருணாசலம் (26), மதுரை மேல அனுப் பானடியை சேர்ந்த முத்து (40) ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 1.5 டன் ரேசன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டு மதுரை உணவு தடுப்புபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.