உள்ளூர் செய்திகள்
வரும் 29-ந்தேதி தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு விழா
தே.மு.தி.க. சார்பில் இஸ்லாமியர்களின் புனித தலமான ஏர்வாடியில் வரும் 29-ந்தேதி மாலை 5 மணியளவில் இப்தார் நோன்பு விழா நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு இஸ்லாமியர்களின் புனித தலமான ஏர்வாடியில் வரும் 29-ந்தேதி மாலை 5 மணியளவில் இப்தார் நோன்பு விழா நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளார் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதார, சகோதரிகளும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு இஸ்லாமியர்களின் புனித தலமான ஏர்வாடியில் வரும் 29-ந்தேதி மாலை 5 மணியளவில் இப்தார் நோன்பு விழா நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளார் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதார, சகோதரிகளும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.