உள்ளூர் செய்திகள்
ஒரே நாளில் 17 பாடங்களுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வு
சேலத்தில் நாளை 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் ஒரே நாளில் 17 பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
சேலம்:
இந்திய அரசின் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ). அனுமதி பெற்று சேலம் மாவட்டத்தில் ஏராளமான சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பகுதி -2 பொதுத்தேர்வு (2021-2022) நேற்று தொடங்கியது. இன்று ஆங்கிலம் மொழிப்பாடம் தேர்வு காரை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.
இதையடுத்து நாளை ஒரே நாளில் பேங்கிங் மற்றும் இன்சூரன்ஸ், மல்டி மீடியா, பாதுகாப்பு, சுற்றுலா, விவசாயம், அழகுகலை, உணவு தயாரிப்பு உள்பட 17 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி 11.30 மணி அளவில் முடிவடைகிறது.