உள்ளூர் செய்திகள்
மெரினாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணியின் மணிபர்ஸ் மாயம்
மெரினாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணியின் மணிபர்ஸ் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையை சுற்றிப்பார்க்க வந்த வியட்நாமை சேர்ந்த பார்ம் மின்ஹ்யூ (46) என்பவரின் மணிபர்ஸ் மாயமானது. அதில் ரூ.50 ஆயிரம் இந்திய பணம், ஏ.டி.எம். டெபிட் கார்டு, வியட்நாம் குடியுரிமை அட்டை ஆகியவை இருந்தன. இதையடுத்து பார்ம்மின் அளித்த புகாரின் பேரில் மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.