உள்ளூர் செய்திகள்
அதிமுக

தஞ்சை தேர் விபத்து- பலி: அ.தி.மு.க. இப்தார் நோன்பு நாளை தள்ளிவைப்பு

Published On 2022-04-27 06:48 GMT   |   Update On 2022-04-27 06:48 GMT
அ.தி.மு.க. சார்பில் இன்று நடைபெறுவதாக இருந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி களிமேடு கிராம தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்படுகிறது.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. சார்பில் இன்று (புதன்கிழமை) நடைபெறுவதாக இருந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி களிமேடு கிராம தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்படுகிறது.

இப்தார் நோன்பு நிகழ்ச்சி நாளை (28-ந்தேதி) மாலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நியூ உட்லன்ஸ் ஓட்டலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News