உள்ளூர் செய்திகள்
திருப்பூர்- தாராபுரம் நீதிபதிகள் இடமாற்றம்
தாராபுரம் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி குமார் சரவணன், மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 55 நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் உத்தரவிட்டார்.
அதில் திருப்பூர் மோட்டார் வாகன விபத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி நாகராஜன், நாகபட்டினம் லோக் அதாலத் நிரந்தர நீதிபதியாகவும், தாராபுரம் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி குமார் சரவணன், மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.