உள்ளூர் செய்திகள்
ரெயில் விபத்து

கடற்கரை ரெயில் நிலைய விபத்து- என்ஜின் டிரைவரின் கவனக்குறைவே காரணம் என விசாரணையில் தகவல்

Published On 2022-04-26 09:35 GMT   |   Update On 2022-04-26 09:35 GMT
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்கு ரெயில் ஓட்டுநரின் தவறே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை:

கடற்கரை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தின் போது ரெயிலில் பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ரெயிலை பணிமனையில் இருந்து நிலையத்திற்கு கொண்டு வந்த போது விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து டிரைவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னை கோட்ட மேலாளர் உத்தரவின் பேரில் 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இன்று விசாரணையை தொடங்கியது.

இதில் முதல்கட்ட விசாரணையில் விபத்திற்கு என்ஜின் டிரைவரின் கவனக்குறைவுதான் காரணம் என தெரியவந்துள்ளது. பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை பயன்படுத்தியதால் ரெயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.

Tags:    

Similar News