உள்ளூர் செய்திகள்
கயத்தாறு அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்
கயத்தாறு அருகே உள்ள வீரபாண்டியபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குழந்தையுடன் மாயமானார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள வீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மனைவி சுகன்யா (வயது25). இவர்களுக்கு தன்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. தமிழ்செல்வன் மும்பையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகன்யா தனது குழந்தையுடன் வீரபாண்டியபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுகன்யா மற்றும் அவரது மகளை காணவில்லை. குழந்தையுடன் மாயமான சுகன்யாவை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை தாமஸ் கடம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான சுகன்யாவை தேடி வருகின்றனர்.