உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி பகுதியில் வாழை இலை விலை இருமடங்கு உயர்வு
நாங்குநேரி பகுதியில் வாழை இலை விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது.
வள்ளியூர்:
நாங்குநேரி பகுதியில் வாழை இலை கட்டுகள் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து சுபமுகூர்த்த தினம் வருவதாலும், தேவை அதிகரிப்பதாலும் வாழை இலைகள் விலை உயர்ந்து காணப்படுகிறது.
100 எண்ணம் கொண்ட ஒரு கட்டு வாழை இலை கடந்த வாரத்தில் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.