உள்ளூர் செய்திகள்
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
கோவை:
கோவை சூலூரை சேர்ந்த தனியார் மில் சூப்பர்வைசர் ஒருவர் சூலூர் போலீசில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது 24 வயது தங்கைக்கும், திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக எனது தங்கை கணவரை பிரிந்து எனது வீட்டில் வந்து வாழ்ந்து வந்தார்.
சம்பவத்தன்று நான் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டேன். எனது மனைவி குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக சென்றார். அப்போது வீட்டில் இருந்த எனது தங்கை யாரிடமும் செல்லாமல் வெளியே சென்றார்.அதன் பின்னர் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
மேலும் எனது தங்கைக்கு திருமணத்துக்கு பின்னர் திண்டுக்கல்லில் இருந்த போது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு. அது நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது.இதனால் எனது தங்கை அவருடன் சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.